×

உடல்நலக்குறைவால் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் தகனம்..!!

சென்னை: உடல்நலக்குறைவால் மரணமடைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அதிமுக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அதிலிருந்து மீண்டு வந்தார். பின்னர் மீண்டும் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்த மதுசூதனன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நேற்று மாலை 3:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதனையடுத்து அவரது உடல் தண்டையார்பேட்டை இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுசூதனனின் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு , அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி , சசிகலா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கட்சி பாகுபாடின்றி வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர். அதற்கு பின், அவரது இல்லத்தில் இருந்து உடல் ஊர்வலமாக சென்னை மூலக்கொத்தளம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் இறுதி ஊர்வலத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவரும் கலந்து கொண்டனர். மயானத்தில் முறைப்படி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மதுசூதனனின் உடல் தகனம் செய்யப்பட்டது. …

The post உடல்நலக்குறைவால் மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் சென்னை மூலக்கொத்தளம் மயானத்தில் தகனம்..!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Madhusudhan ,Moolakotthalam graveyard ,Chennai ,president ,Moolakottalam ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்